Friday, November 26, 2010

நீர் அடித்து நீர் விலகாது?

நீர் அடித்து நீர் விலகாது என்பது ஒரு பழமொழி, இது சில குணாதிசயங்களைக் குறிப்பிட பயன்படுகிறது.

ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தண்ணீரால் அடித்தால் தண்ணீர் என்ன, எத்தகைய பொருளும் விலகிவிடும்.

தண்ணீர்பீச்சான் (waterjet) என்ற கருவியைக்கொண்டு பீச்சி அடிக்கப்படுகின்ற தண்ணீர் மிகவும் கடினமான உலோகத்தைக்கூட துளைத்துவிடும். ஒன்றரை அடி (45 செ.மீ) அளவு தடிமனான பொருளைக்கூட துளைத்துவிடும்.

What is a matter?

அது இது எது? What is a matter?

அது என்ன? என்ன அது? என்ன அது = என்னது? ...

என்னது? தலைசுற்றுகிறதா?!!

நான் அது என்ற அதைப்பற்றித்தான் பேசுகிறேன்.

அதுவாகி, அவனளாய் எல்லாம் ஆகி,
அடி நடுவு முடிவாகி,
அகண்டமாகி, பொதுவாகி,
பல்லுயிர்களனைத்துக் கெல்லாம் புகலிடமாய்
எப்பொருட்கும் மூலமாகி, ...

இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்ற அது எதுவாக இருக்கும்?.

எந்த ஒரு பொருளுக்கும் நம்மால் உணரக்கூடிய திட, திரவ, வாயு என்ற மூன்று நிலையைக் கடந்த நான்காம் நிலையே அது என்று குறிப்பிடப்படுகின்றது. அதை பிளாஸ்மா (Plasma) என்ற ஒளிர்வு நிலை, ஈர்ப்பு, ஆத்மா, உயிர் என்று எப்படியும் அழைக்கலாம். அது இல்லாமல் எதுவுமே இல்லை.

Saturday, October 9, 2010

தொப்புள்கொடி உறவு - cordblood relation

குழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம் போது அத‌ன் தொ‌ப்பு‌ள் கொடி‌யி‌லு‌ம், எலு‌ம்பு ம‌‌ஞ்ஜை‌யிலு‌ம் காண‌ப்படு‌ம் ‌ஸ்டெ‌ம் செ‌ல்களை‌க் கொ‌ண்டு பல ‌சி‌க்கலான நோ‌ய்களு‌க்கு ‌தீர்வு காணலா‌ம் எ‌ன்று ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் இ‌ந்த ‌சி‌கி‌ச்சை முறை த‌மிழக‌த்‌தி‌ல் த‌ற்போதுதா‌ன் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இர‌த்த‌த்‌தி‌ல் ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளான 8 வயது ‌சிறு‌மி‌க்கு, அவளது சகோத‌ர‌னி‌ன் ‌ஸ்டெ‌ம் செ‌ல் எடு‌த்து ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து குண‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌தியா‌விலேயே ‌ஸ்டெ‌ம்செ‌ல் மூல‌ம் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பது இது முத‌ல் முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
கோவையை சேர்ந்த த‌ச்சு‌த் தொ‌ழிலா‌ளியான செந்தில்குமார் - சரோஜினி த‌ம்ப‌திக‌ளி‌ன் மகள் தாமிரபரணி. தா‌‌மிரபர‌ணி‌க்கு ஒன்றரை வயது இருந்தபோது  தாலசீமியா என்ற நோய் பாதித்தது. இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்பட்டது. இய‌ற்கையாக உட‌லி‌ல் ர‌த்த‌ம் உ‌ற்ப‌த்‌தியாவது குறை‌ந்ததா‌ல் தாமிரபரணிக்கு மாதந்தோறும் ரத்தம் ஏற்றி வ‌ந்தன‌ர்.
இதுபற்றி, அப்போலோ மரு‌த்துவ‌ர் ரேவதிராஜிடம் செந்தில்குமார் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், மீண்டும் ஒரு குழந்தை பெற முயற்சி செய்யுங்கள். அந்த குழந்தை பிறக்கும்போது, தொப்புள் கொடி ரத்தத்தை எடுத்து தாமிரபரணிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என்றார்.
மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் ஆலோசனைப்படி, 2008ம் ஆண்டு மே மாதம் செ‌ந்‌தி‌ல்குமா‌ர்-சரோ‌ஜி‌னி த‌ம்ப‌தி‌க்கு ஆண் குழந்தை ‌பிற‌ந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேமிக்கப்பட்டு, சேத்துப்பட்டில் உள்ள லைஃப் செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வைக்கப்பட்டது. கடந்த மார்ச் 17ம் தேதி தாமிரபரணிக்கு அப்போலோ மருத்துவமனையில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமாகிவிட்டார். தாமிபரணி மறு பிறவி எடுக்க பெரும் உதவியாக இருந்துள்ளது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை எனப்படும் செல் தெரபி.
லைப்செல் இன்டர்நேஷனல் தலைவர் மயூர் அபாயா கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, அதன்மூலம் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது என்றார்.
வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின்றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.
இதுதான் தொப்புள் கொடி உறவோ!!!.

Saturday, September 18, 2010

கருவுருதல் கருவளர்ச்சி Embryo and Fetus

கரு வளர்ச்சி

ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, மாதம் ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வருகிறது. இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும். விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.

பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய உயிர் (கரு) உருவாகும்.

உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.

உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. 100 - 300 மில்லியன் விந்தணுக்கள் ஒருதடவையில் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.

பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்! கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! ஒருகோடி விந்தணுவும் குழந்தையாக வளர்ந்தால் என்ன ஆவது!!!, அதனால் தான் இறைவன் ஒன்றை மட்டும் குழந்தையாக வளர வழி செய்தான். உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இந்த கரு வளரும் நிலைக்கு வந்துவிடும், இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும். இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டத்தை எம்பிரையோ Embryo என்று அழைக்கப்படும். இதன் பிறகு கருவை பேடஸ் Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் ஒரு புழுவைப்போன்று 1 இன்ச் அளவு தான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும்.

Stem Cell ஸ்டெம் செல்

ஸ்டெம் செல் - Embryonic, Adult, Cord Blood Stem Cells

இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப்பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது. இதில் பலவகை உள்ளது.

     1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
     2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells)
     3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells)

எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
மனித சினைமுட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையிலிருந்து, நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப்படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும், அதில் வெளிப்பகுதியான trophoblast தொப்புள்கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக்கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast மற்ற அனைத்துவகை செல்களை inner cell mass உள்ளடக்கியதாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும். இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் மூலஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்துவகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையிலிருந்து Gastrula என்ற நிலையை அடையும். இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக்கொடியுடன் (Placenta) கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு வளரத்தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம்.

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒருசெல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது. ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படும்போது அந்த கரு அழிந்துவிடக்கூடியதாக இருப்பதால் இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்படவேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells)
Cord blood-derived embryonic-like stem cells (CBEs)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்புமஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும். தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.

இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக்கொண்டு மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண்செயலாகும்.

Wednesday, August 11, 2010

குரோமோசோம் என்ற தலைவிதி

உயிரினங்கள் அனைத்திலும் இனிப்பு, காரம், உப்பு என்ற மசாலா கலவை உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் அளவு வேறுபடும் அவ்வளவு தான். இந்த கெமிஸ்டிரி காதலிப்பவர்கள் பயன்படுத்தும் அந்த கெமிஸ்டிரி தான்.
ஒவ்வொறு உயிரணுவிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் குரோமோசோம்கள் உள்ளன. இது மனித இனத்தின் உயிரணுவில் 22 குரோமோசோம்கள் ஒன்றை ஒன்று ஒத்த ஜோடியாகவும், 1 ஜோடி குரோமோசோம்கள் ஆண், பெண் X,Y அல்லது ஆண், ஆண் X,X அல்லது பெண், பெண் Y,Y என்ற ஜோடியாகவும் உள்ளது. மொத்தமுள்ள 23 குரோமோசோம்களில் 22ல் மனிதனுடைய மற்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது.  ஒருவரின் உயரம், (தோல், முடி, கண்விழி ஆகியவற்றின்) நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி இதுபோன்ற அனைத்து குணங்களும் பதிவாகி உள்ளது. அந்த 23வது 1 ஜோடி குரோமோசோமில் ஆண், பெண் அல்லது ஆண், ஆண் அல்லது பெண், பெண் என்ற பாலின குணங்கள் பதிவாகி உள்ளது. உதாரணமாக, குரோமோசோம் 15ல் தோல் நிறம்  SLC24A5  கண்விழி நிறம்  15q11-q15 குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோமோசோமில் உள்ள  டிஎன்ஏ DNAல் அடினின் adenine(A), தைமின் thymine (T), குவானின் guanine (G) சைடோசின் cytosine (C) ரசாயன கலவைகள் உள்ளது. இவற்றை குறிக்கும் AT / GC என்ற குறியீடுகளைத் தான் எழுத்து என்று குறிப்பிடுகிறேன். இத்தகைய எழுத்து மொத்தம் 3,079,843,747 மனித உயிரணுவில் உள்ளது இதுதான் தலையெழுத்து அல்லது தலைவிதி. நம் தலைவிதி AT / GC என்ற 1000 எழுத்துகளைக் கொண்ட 1000 பக்கங்கள் உள்ள 3300 புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த மாபெரும் நூலகத்தை உள்ளடக்கிய மனித கருமுட்டை கடுகு அளவு இல்லை அதை விடவும் மிகச்சிறியது.
கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.  இந்த தலைவிதியை என்ன சொல்ல.
இப்போது சிந்தியுங்கள் எத்தனை வல்லமை படைத்த இறைவன் இதை படைத்திருப்பான்.
மேலும், எல்லா உயிர்ப்பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இருகால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு( கால் )களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.       ( ூரத்துந் நூர், வசனம் - 45 .       24:45)
நிச்சயமாக நாம் ( ஆதி ) மனிதரைக் களிமண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். ( ஸூரத்துல் முஃமினூன், வசனம் - 12.        23:12)
 இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான்- ( கர்ப்பக் கோளறையில் ) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. ( ஸூரத்துந் நஜ்ம், வசனம் - 45, 46.       53:45,46)

Thursday, August 5, 2010

விர்சுவல் என்ற மாயை

இதை இருக்கிறது என்பதா அல்லது இல்லை என்பதா, ம் கூம் இல்லாமல்(ஆனால்)இருக்கிறது என்பது தான் சரி.

இல்லாமல்(ஆனால்)இருந்தது
இல்லாமல்(ஆனால்)இருக்கிறது
இல்லாமல்(ஆனால்)இருக்கும்

இந்த முன்று நிலைகளும் அனைத்தையும் படைத்து காத்து வருகிற ஏக இறைவனுக்கு பொருந்தும்.

உயிர் எங்கே இருக்கிறது, மனது எங்கே இருக்கிறது, நினைவு எங்கே இருக்கிறது. இது எல்லாம் விர்சுவல் என்ற மாயை தான்.

இந்த நவீன காலத்தில் மனிதன் உறுவாக்கிய விர்சுவலிடி பலவிதங்களில் பயன்படுகிறது. ஜாவா விர்சுவல் மெஷின், விர்சுவல் மெமோரி, விர்சுவல் கீபோர்ட், விர்சுவலைஜேஷன் மற்றம் பல கணினியுகத்தில் உபயோகமாகிறது.

நேனோவின் அளவு

1 மீட்டர் = 1000 மில்லிமீட்டர், 1 மில்லிமீட்டர் = 1000 மைக்ரோமீட்டர்,
1 மைக்ரோமீட்டர் = 1000 நேனோமீட்டர்,
1 மீட்டர் 1,000,000,000 நேனோமீட்டர் அல்லது மில்லிமைக்ரான்
1 மில்லிமீட்டர் = 1,000,000 நேனோமீட்டர்

ஒரு கடுகின் அளவு 1 மில்லிமீட்டர் என்றால் அதை 10 லட்சம் பகுதியாக பிரித்தால் வருகின்ற அளவு 1 நேனோ.

இதைவிடவும் சிறிய அளவான பிகோ (1 மீட்டர் = 1,000,000,000,000  pico பிகோமீட்டர் ) 1×10−12 m, or as 1 E−12 அணுக்களின் அளவை குறிப்பிட பயன்படுகிறது.

சிந்திக்க வேண்டாமா? Don't you Think?

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது

மானிடராய் பிறந்த காலையின்

கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது -  ஔவையார் பாடல்

கூன் குருடு செவிடு இல்லாமல் பிறந்த நாம் அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா?

உங்களின் சிந்தனை ஓட்டம் புத்தகங்கள் படிப்பதிலோ, மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதிலோ இருக்கலாம். ஆனால் இன்டர்னெட் என்ற மாபெறும் நூலகத்தில் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதை விட்டு விட்டு வீண் பொழுதுபோக்கு விசயங்களில் மூழ்கி விடாதீர்கள்.

குர்ஆனை என்றும் சிறிதளவாவது ஓத முயற்சி செய்யுங்கள்.
அல்குர்ஆன் ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக, வானவியல் (Astronomy), மருத்துவம் (Medicine), புவியியல் (Geography), இயற்பியல் (Physics), வேதியல் (Chemisty), விலங்கியல் (Zoology), தாவரவியல் (Botany), உயிரியல் (Biology), கருவியல் (Embryology), சமுத்திரவியல் (Oceanography), மண்ணியல் (Geology) உட்பட அனைத்து துறைகளைப் பற்றியும் மிக அழகாகவும், ஆணித்தரமாகவும் பேசுகின்றது. ஒவ்வொரு துறையைப் பற்றியும் அல்குர்ஆன் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு துறைசார்ந்த நிபுணர்கள், மாமேதைகள் குறிப்பிடுவதை விட மிக அழகாகவும், துள்ளியமாகவும் பேசுகின்றது.

மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (18:7).

இந்த உலகத்தில் இன்பம் என்று எதை நினைக்கின்றோமோ அவையெல்லாம் அற்ப இன்பங்களாகவே இருக்கின்றன. எவையெல்லாம் சுகம் என்று நினைக்கின்றோமோ அவையெல்லாம் மாயையாகத்தான் இருக்கின்றன. அவர்களின் சிந்தனையை பொருத்து அவைகள் அமைகின்றன.

இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? (4:82)

என்று குர்ஆனில் அல்லாஹ் கேட்கும் கேள்விக்கு நம்முடைய பதில்தான் என்ன?

அறிவுடையோரே! அறிவுடைய மக்களே! சிந்திக்க வேண்டாமா?

Wednesday, August 4, 2010

Micro to Nano மைக்ரோவிலிருந்து நேனோ வரை

மைக்ரோவிலிருந்து நேனோ வரை

இதுவரை மைக்ரோபிராசசர், மைக்ரோபிளிம், மைக்ரோசாப்ட் என்று பலவிதமான நுண்பொருள்களைப் பற்றி அறிந்திருந்தோம். தற்போது நுண்ணிய பொருள்களை விடவும் மிகநுண்ணிய பொருள்களை உருவாக்குகிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்றழைக்கிறார்கள். TATA’s Nano Car டாடாவின் நேனோ கார் இந்தத் தொழில்நுட்பத்தில் உருவானது அல்ல.

இந்தத் தலைமுறையின் புதிய வரவாக இந்த நேனோ டெக்னாலஜி உள்ளது. இதை முன் கூட்டியே அறிந்தோ என்னவோ நம் முன்னோர்கள் அதை பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன்

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குருகத்தரித்த குறள்.

இந்தத் நேனோ டெக்னாலஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முள்ளு முனையிலே மூன்று குளம் என்ன அதற்கு மேலேயும் வெட்டிடலாம். அதில் நேனோ மீன்களை வளர்த்து அந்த மீன்களை நேனோ படகில் போய் நேனோ வலைவீசி பிடிக்கலாம்.

ஆனால் இவற்றை எல்லாம் நாம் வெறும் கண்களால் பார்க்க இயலாது. எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope) மூலமாக தான் பார்க்க முடியும். அந்த அளவு மிக மிகச் சிறியவை.

தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் (H2O) இனைந்த மூலக்கூறு (Molecule). அதுபோல கார்பனுடன் மற்ற அணுக்கள் இனைந்த மூலக்கூறுகளைக் கொண்டு புதிய நேனோ கருவிகளை உருவாக்குகிறார்கள். ஒரு நேனோ ரோபோ (Robot) இரத்தக் குழாயில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு அடைப்பை நீக்குவதற்கோ அல்லது புற்றுநோய் கட்டியை வெட்டி எடுப்பதற்கோ பயன்படுத்தலாம்.

இந்த நேனோ டெக்னாலஜி சார்ந்த படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பல்கலைக்கழகங்களிலும் சில கல்லூரிகளிலும் இதை பயிற்றுவிக்க தொடங்கியுள்ளார்கள். இந்த நேனோ டெக்னாலஜியும் இதனுடன் இனைந்த ஜெனிடிக் என்ஜினியரிங் (Genetic Engineering) தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் இன்றியமையாததாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

Tuesday, August 3, 2010

Tamil Genetics தமிழ் ஜெனிடிக்ஸ்

தமிழ் ஜெனிடிக்ஸ்

உலகின் முதல் குடிமகன் ஆதம் நிச்சயமாக ஒரு திராவிட தமிழர் தான்.

ஆதி காலம் முதல் மனித சமுகம் பல வளர்ச்சியை கண்டுள்ளது. வணக்க வழிபாட்டு முறையும் வாழ்க்கைத் தரமும் தான் மாறி உள்ளது. ஆனால் நாம் அனைவரும் ஆதமின் சமுகத்தினர் தான் அதிலும் தமிழ் திராவிடர்களாகிய நம்முடைய ஜீன்களும் (Genes) குரோமோசோமும் (Chromosome) அதை நிரூபிக்கும்.