Friday, August 7, 2015

Kavidanjali கவிதாஞ்சலி

கனவு நாயகர் A.P.J.அப்துல் கலாம் அவர்களுக்கு கவிதாஞ்சலி

உலகெங்கும் தமிழோடு உலவிய உத்தமரே,
மதிவாளரே, மனுக்குல மன்னரே,
இருபது இருபதின் இந்தியப்பேரரசரே,
இனி யாருக்கு நாங்கள் முடிசூட்டுவோம்.

உலக இளைஞர்களின் நேசரே,
வயோதிகம் வராத இளைஞரே,
ஓய்வுக்கே ஓய்வு தந்த உழைப்பாளரே,
இளைப்பாற எங்கே சென்றுவிட்டீர்.

கருத்துக்கருவூலமே, சன்மார்க்க சித்தரே,
இறுதிவரை அறவுரை தந்த முகவரியே,
இளைய பட்டாளத்தின் இராணித்தேனியே,
நண்பர்களை மட்டும் கொண்ட தளபதியே.

அணுவல்லமையை அறியச்செய்தோரே,
நிலவுக்கும் செவ்வாய்க்கும் நீந்திச்சென்றவரே
பத்தாம் கோளையும் பார்த்து விட்டு
பால்வெளிக்கு பறந்து சென்றீரோ.

அன்பால் அடிமையாக்கிய அதிபதியே
ஈகை நிறைந்தோரே, உயிர்ப்பிச்சை தந்தவரே
கனவை காணச்சொன்னீரே, ஆனால்
உன் இறுதிக்கனவை குழிதோண்டி புதைத்தாரே.

என்றும் உன் நினைவுடன்

கவிதாசன் அப்துல்சமது
http://centamil.blogspot.in/

Wednesday, December 14, 2011

அறிவியல் புதினங்கள்


Nanotechnology நேனோடெக்னாலஜி

Abdul Samed at centamil - 1 year ago
நேனோ டெக்னாலஜி முள்ளு முனையிலே மூன்று குளம் வெட்டினேன் Nanotechnology or nanotech is the study of the controlling of matter on an atomic and molecular scale. Generally nanotechnology is used to developing materials or devices sized between 1 to 100 nanometer equal to one billionth of a metre 1x 10−9. Also Picotechnology 10−12 will be future topic. This topic explained in Tamil தமிழில் படிக்க.

அணாவா ஹெக்சாவா 16 அணா x 12 காசு

Abdul Samed at centamil - 3 years ago
அணாவா ஹெக்சாவா அணா என்ற ஹெக்சா டெசிமல் முதலில் அணா என்பதைப் பற்றி இளந்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். அணா என்றால் 12 காசு ஒரு ரூபாய்க்கு 16 அணா. இப்பொழுது கூட அரை ரூபாயை (50 காசு) எட்டு அணா என்றே பழைய செல்லப்பேரில் அழைக்கிறார்கள். இப்பொழுது ஹெக்சா டெசிமலைப் பற்றி பார்ப்போம்.

பைனரி கணக்கு

Abdul Samed at centamil - 3 years ago
பைனரி கணக்கு கம்பியூட்டர் கணக்கு போட எத்தனை இலக்கங்கள் உள்ளன?. (0 & 1 binary) நாம் உபயோகிக்கக் கூடிய கணக்கில் மொத்தம் பத்து இலக்கங்கள் உள்ளன. 0 – 9 இந்த பத்து இலக்கங்களை தசம இலக்கங்கள் (தஸ் என்றால் ஹிந்தியில் பத்து) என்றும் ஆங்கிலத்தில் இவற்றை டெசிமல் சிஸ்டம் (Decimal System) என்றும் குறிப்பிடுகிறோம். விபரம் அறிய கிளிக் செய்யவும் ஆஸ்கி 256 குறி ASCII 256

கர்ப்பகாலம்

Abdul Samed at centamil - 3 years ago
கர்ப்பகாலம் (கருகாலம்) பற்றிய கற்கால சூழ்நிலை இந்த செய்தி பெண்களின் கருவுற்ற காலம் பற்றிய விழிப்புணர்வு அவசியத்தை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது. இது பற்றி ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் - In English.

கடன் அட்டை

Abdul Samed at centamil - 3 years ago
கடன் அட்டை - Credit Card வரவு எட்டணா, சிலவு பத்தணா. எல்லா வங்கியும், உங்களை அன்புடன் உபசரித்து கடன் அட்டையை வழங்கும். சில மாதங்கள் கழித்து நீங்கள் திக்கு முக்காடிப் போவீர்கள். ஆம், சிலவழித்த பணத்தை கட்ட முடியாமலும், வங்கியின் தனிப்பட்ட கவனிப்பாலும் நீங்கள் அந்த நிலைக்கு தள்ளப்படுவீர்கள். என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். பல முறை யோசித்து கடன் அட்டையை உபயோகிக்கவும். இதை விட உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தால் டெபிட் கார்ட் - Debit Card உபயோகிக்கவும்.

கணினித் தமிழ்

Abdul Samed at centamil - 3 years ago
கணினி யுகத்தில் தமிழ் கோலோச்ச ஆரம்பித்து கால் நூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இதுவரை எத்தனையோ மெண்பொருள்களும், பல TTF எழுத்துருக்களும் உபயோகத்தில் இருந்தாலும் அவற்றை எளிமையாக கையாள முடிவதில்லை. இதற்கு ஒரு நல்ல தீர்வாக வந்தது தான் ஒருங்குக் குறியீடு (Unicode) முறை. இதனை தமிழ் தகுதர (TSCII) சீரமைப்பில் உள்ளதாக, தமிழக அரசு மற்றும் தமிழார்ந்த அறிஞர்கள் வரவேற்று உள்ளார்கள். இது பற்றி மேலும் அறிந்திட கிளிக் செய்யவும். http://peacecraft.tripod.com/infomine/tamil_u.htm http://tamil.net/projectmadurai/ www.ezilnila.com www.tamilnation.org/

மனோரஞ்சிதம்

Abdul Samed at centamil - 3 years ago
என் கவிதைகள் (Top Ten Kavidai in PDF 110 KB). 1. புதுமைப் பெண் 2. கனவு வங்கி 3. குடிமக்கள் 4. அதிசயம் 5. கடிதம் 6. இனிய விடியல் 7. இல்லற ஏலம் 8. சத்திய சோதனை 9. உள் மனமே சொல் 10. வஞ்சிப்புகழ்ச்சி

Friday, November 26, 2010

நீர் அடித்து நீர் விலகாது?

நீர் அடித்து நீர் விலகாது என்பது ஒரு பழமொழி, இது சில குணாதிசயங்களைக் குறிப்பிட பயன்படுகிறது.

ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், தண்ணீரால் அடித்தால் தண்ணீர் என்ன, எத்தகைய பொருளும் விலகிவிடும்.

தண்ணீர்பீச்சான் (waterjet) என்ற கருவியைக்கொண்டு பீச்சி அடிக்கப்படுகின்ற தண்ணீர் மிகவும் கடினமான உலோகத்தைக்கூட துளைத்துவிடும். ஒன்றரை அடி (45 செ.மீ) அளவு தடிமனான பொருளைக்கூட துளைத்துவிடும்.

What is a matter?

அது இது எது? What is a matter?

அது என்ன? என்ன அது? என்ன அது = என்னது? ...

என்னது? தலைசுற்றுகிறதா?!!

நான் அது என்ற அதைப்பற்றித்தான் பேசுகிறேன்.

அதுவாகி, அவனளாய் எல்லாம் ஆகி,
அடி நடுவு முடிவாகி,
அகண்டமாகி, பொதுவாகி,
பல்லுயிர்களனைத்துக் கெல்லாம் புகலிடமாய்
எப்பொருட்கும் மூலமாகி, ...

இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்ற அது எதுவாக இருக்கும்?.

எந்த ஒரு பொருளுக்கும் நம்மால் உணரக்கூடிய திட, திரவ, வாயு என்ற மூன்று நிலையைக் கடந்த நான்காம் நிலையே அது என்று குறிப்பிடப்படுகின்றது. அதை பிளாஸ்மா (Plasma) என்ற ஒளிர்வு நிலை, ஈர்ப்பு, ஆத்மா, உயிர் என்று எப்படியும் அழைக்கலாம். அது இல்லாமல் எதுவுமே இல்லை.

Saturday, October 9, 2010

தொப்புள்கொடி உறவு - cordblood relation

குழ‌ந்தை ‌பிற‌க்கு‌ம் போது அத‌ன் தொ‌ப்பு‌ள் கொடி‌யி‌லு‌ம், எலு‌ம்பு ம‌‌ஞ்ஜை‌யிலு‌ம் காண‌ப்படு‌ம் ‌ஸ்டெ‌ம் செ‌ல்களை‌க் கொ‌ண்டு பல ‌சி‌க்கலான நோ‌ய்களு‌க்கு ‌தீர்வு காணலா‌ம் எ‌ன்று ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் இ‌ந்த ‌சி‌கி‌ச்சை முறை த‌மிழக‌த்‌தி‌ல் த‌ற்போதுதா‌ன் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.
இர‌த்த‌த்‌தி‌ல் ‌சிவ‌ப்பு அணு‌க்க‌ள் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளான 8 வயது ‌சிறு‌மி‌க்கு, அவளது சகோத‌ர‌னி‌ன் ‌ஸ்டெ‌ம் செ‌ல் எடு‌த்து ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து குண‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்‌தியா‌விலேயே ‌ஸ்டெ‌ம்செ‌ல் மூல‌ம் ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌ப்பது இது முத‌ல் முறை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
கோவையை சேர்ந்த த‌ச்சு‌த் தொ‌ழிலா‌ளியான செந்தில்குமார் - சரோஜினி த‌ம்ப‌திக‌ளி‌ன் மகள் தாமிரபரணி. தா‌‌மிரபர‌ணி‌க்கு ஒன்றரை வயது இருந்தபோது  தாலசீமியா என்ற நோய் பாதித்தது. இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு ரத்த சோகை ஏற்பட்டது. இய‌ற்கையாக உட‌லி‌ல் ர‌த்த‌ம் உ‌ற்ப‌த்‌தியாவது குறை‌ந்ததா‌ல் தாமிரபரணிக்கு மாதந்தோறும் ரத்தம் ஏற்றி வ‌ந்தன‌ர்.
இதுபற்றி, அப்போலோ மரு‌த்துவ‌ர் ரேவதிராஜிடம் செந்தில்குமார் ஆலோசனை கேட்டார். அதற்கு அவர், மீண்டும் ஒரு குழந்தை பெற முயற்சி செய்யுங்கள். அந்த குழந்தை பிறக்கும்போது, தொப்புள் கொடி ரத்தத்தை எடுத்து தாமிரபரணிக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும் என்றார்.
மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன் ஆலோசனைப்படி, 2008ம் ஆண்டு மே மாதம் செ‌ந்‌தி‌ல்குமா‌ர்-சரோ‌ஜி‌னி த‌ம்ப‌தி‌க்கு ஆண் குழந்தை ‌பிற‌ந்தது. அந்த குழந்தையின் தொப்புள் கொடி ரத்தம் சேமிக்கப்பட்டு, சேத்துப்பட்டில் உள்ள லைஃப் செல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் வைக்கப்பட்டது. கடந்த மார்ச் 17ம் தேதி தாமிரபரணிக்கு அப்போலோ மருத்துவமனையில் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் முழுமையாக குணமாகிவிட்டார். தாமிபரணி மறு பிறவி எடுக்க பெரும் உதவியாக இருந்துள்ளது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை எனப்படும் செல் தெரபி.
லைப்செல் இன்டர்நேஷனல் தலைவர் மயூர் அபாயா கூறுகையில், இந்தியாவில் முதல் முறையாக தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, அதன்மூலம் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது என்றார்.
வருங்காலத்தில் நாம் நம்முடைய சந்ததிகளுக்கு செல்வத்தை சேமிக்கின்றோமோ இல்லையோ, தொப்புள் கொடி ரத்தத்தை சேமித்து வைத்து, நம் குழந்தைகளுக்கு ஏதேனும் வியாதிகள் ஏற்பட்டால், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல் மூலம் சரிசெய்யலாம்.
இதுதான் தொப்புள் கொடி உறவோ!!!.

Saturday, September 18, 2010

கருவுருதல் கருவளர்ச்சி Embryo and Fetus

கரு வளர்ச்சி

ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, மாதம் ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வருகிறது. இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும். விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.

பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய உயிர் (கரு) உருவாகும்.

உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.

உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. 100 - 300 மில்லியன் விந்தணுக்கள் ஒருதடவையில் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.

பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்! கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! ஒருகோடி விந்தணுவும் குழந்தையாக வளர்ந்தால் என்ன ஆவது!!!, அதனால் தான் இறைவன் ஒன்றை மட்டும் குழந்தையாக வளர வழி செய்தான். உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இந்த கரு வளரும் நிலைக்கு வந்துவிடும், இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும். இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டத்தை எம்பிரையோ Embryo என்று அழைக்கப்படும். இதன் பிறகு கருவை பேடஸ் Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் ஒரு புழுவைப்போன்று 1 இன்ச் அளவு தான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும்.

Stem Cell ஸ்டெம் செல்

ஸ்டெம் செல் - Embryonic, Adult, Cord Blood Stem Cells

இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப்பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது. இதில் பலவகை உள்ளது.

     1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
     2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells)
     3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells)

எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
மனித சினைமுட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையிலிருந்து, நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப்படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும், அதில் வெளிப்பகுதியான trophoblast தொப்புள்கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக்கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast மற்ற அனைத்துவகை செல்களை inner cell mass உள்ளடக்கியதாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும். இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் மூலஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்துவகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையிலிருந்து Gastrula என்ற நிலையை அடையும். இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக்கொடியுடன் (Placenta) கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு வளரத்தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம்.

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒருசெல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது. ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படும்போது அந்த கரு அழிந்துவிடக்கூடியதாக இருப்பதால் இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்படவேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells)
Cord blood-derived embryonic-like stem cells (CBEs)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்புமஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும். தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.

இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக்கொண்டு மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண்செயலாகும்.