Saturday, September 18, 2010

கருவுருதல் கருவளர்ச்சி Embryo and Fetus

கரு வளர்ச்சி

ஒரு பெண் பருவமடைந்தது முதல், மாதவிடாய் நிற்கும் காலம் வரை, மாதம் ஒரு கரு முட்டை சினைப்பையில் உருவாகி வெளியே வருகிறது. இந்தக் கருமுட்டைக்கு தானாகவே நகரும் திறன் கிடையாது. சினைப்பையிலிருந்து வெளிவந்த முட்டை கருப்பைக் குழாயினால் உறிஞ்சிக் கொள்ளப்பட்டு, கருப்பைக் குழாயின் தசை அசைவுகளால் மெல்ல மெல்ல முன்னேறி கருப்பையினுள்ளே நுழைகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் விந்தணு வந்து அதோடு சேரும் வாய்ப்பு உருவானால் மட்டுமே அந்த கருமுட்டை சினையடைந்து தொடர்ந்து உயிர்வாழ முடியும்; கரு உருவாகும். விந்து உயிரணு வந்துசேரும் வாய்ப்பு ஏற்படாவிடில், அந்த முட்டை கருப்பையிலேயே செயலிழந்து அழிந்து போகிறது; மாதவிடாயின்போது வெளியேறிவிடுகிறது.

பெண்ணின் சினைப்பையிலிருந்து உருவாகும் முட்டையுடன் இந்த விந்தணு (உயிரணு) இணையும்போதுதான் புதிய உயிர் (கரு) உருவாகும்.

உடலுறவின்போது ஒருமுறை வெளியேறும் விந்துவில் சுமார் 100 மில்லியனிலிருந்து 300 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இந்த விந்தணுக்கள் ஒரு தலைப்பகுதியும் நீண்ட வால் பகுதியும் கொண்டவை. இந்த வால்பகுதியை அசைத்து அசைத்து விந்தணுக்களால் மிக மிக வேகமாக நகர்ந்து செல்ல முடியும்! உடலில் இருந்து வெளியேறிய இந்த விந்தணுக்கள் சுமார் 72 மணி நேரம் வரையில் உயிரோடிருக்கும்.

உடலுறவின்போது வெளிவரும் விந்தணுக்கள் பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே நீந்திக் கருப்பையின் வாய்ப் பகுதியை அடைந்து அதன் உள்ளே புகுகின்றன. 100 - 300 மில்லியன் விந்தணுக்கள் ஒருதடவையில் வெளி வந்தாலும் முட்டை கருவுற ஒரே ஒரு விந்தணு மட்டுமே தேவை! முட்டையின் மேற்பகுதிச் சுவர்கள் கெட்டியாக இருக்கும். விந்தணுக்கள் எளிதில் அதனுள் புகுந்துவிட முடியாது. விந்தணுக்களின் தலைப்பகுதியில் ஒருவித வேதிப்பொருள் சுரக்கும். இது கருமுட்டையின் மேற்பரப்பைக் கரைத்து மிக மிக நுண்ணிய ஒரு துளையை உண்டு பண்ண, அந்தத் துளையின் வழியாக விந்தணு உள்ளே நுழைந்துவிடும்.

பல மில்லியன் விந்தணுக்கள் ஒன்றோடொன்று முட்டி மோதி கருமுட்டையின் உள்ளே நுழைய முயற்சி செய்யும்! கடைசியாக ஒன்றே ஒன்று மட்டுமே வெற்றிவாகை சூடும்! ஒருகோடி விந்தணுவும் குழந்தையாக வளர்ந்தால் என்ன ஆவது!!!, அதனால் தான் இறைவன் ஒன்றை மட்டும் குழந்தையாக வளர வழி செய்தான். உள்ளே நுழைந்து கருமுட்டையின் குரோமோசோம்களோடு இணைந்துவிடும். இதையே முட்டை கருவுறுதல் என்கிறோம். கருவுற்ற முட்டையிலுள்ள குரோமோசோம்கள் இரண்டிரண்டாகப் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். ஒன்று இரண்டாகி, பின்னர் 4, 8, 16, 32, 64 என பல்கிப்பெருகும். இந்த கரு வளரும் நிலைக்கு வந்துவிடும், இது இரண்டு வாரங்களுக்குட்பட்ட வளர்ச்சியாகும். இரண்டு மாதம் வரை வளர்ச்சியடைகின்ற இந்த கட்டத்தை எம்பிரையோ Embryo என்று அழைக்கப்படும். இதன் பிறகு கருவை பேடஸ் Fetus என்று கூறுகின்றோம். இந்த நிலையில் ஒரு புழுவைப்போன்று 1 இன்ச் அளவு தான் இருக்கும். அதனால் தான் நமது பெண்கள் ஏதேனும் புழு, புச்சி உண்டாகி இருக்கிறதா என்று கேட்பார்கள். இதற்கு மேலும் வளருகின்ற கருவைத் தான் குழந்தை என்று அழைக்க இயலும்.

Stem Cell ஸ்டெம் செல்

ஸ்டெம் செல் - Embryonic, Adult, Cord Blood Stem Cells

இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயம் ஸ்டெம் செல் ஆகும். இது உயிரினங்களில் உள்ள மிகநுண்ணிய மூலசெல்லாகும். இந்த ஸ்டெம் செல்ஸ் பல்கிப்பெருகும் குணமுடையது. அது உடலின் எந்த ஒரு முதிர்ந்த செல்லாகவும் மாறக்கூடியது. இதில் பலவகை உள்ளது.

     1. எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
     2. அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (adult stem cells)
     3. கார்ட்பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cordblood stem cells)

எம்பிரயோனிக் ஸ்டெம் செல்ஸ் (embryonic stem cells)
மனித சினைமுட்டையுடன் Ovum விந்து Sperm இனைந்து கருவுற்று, மூன்றாவது நாள் ஒற்றைசெல் கரு Zycote நிலையிலிருந்து, நான்காவது நாள் Totipotent தன்மையுடன் உள்ள Morula என்ற பிரிக்கப்படாத (undifferentiated) 16 செல் என்ற நிலையை அடையும். இந்த நிலையில் இது மேலும் பல எம்பிரயோனிக் செல்களை உருவாக்க இயலும். பின்பு ஐந்தாம் நாள் Blastocyst என்ற 64 செல்லிருந்து 150 செல் வரையிலுள்ள நிலையை அடையும், அப்போது அது மூன்று பகுதிகளாக (differentiate) பிரியும், அதில் வெளிப்பகுதியான trophoblast தொப்புள்கொடியுடன் (umbilical cord) சேர்ந்த (Placenta) நஞ்சுக்கொடியாகவும், தலைப்பகுதி போன்ற Embryoblast மற்ற அனைத்துவகை செல்களை inner cell mass உள்ளடக்கியதாகவும் இருக்கும், உள்ளிருக்கும் Blastocoele என்ற காலி இடத்தில் கரு வளரும். இந்த வகை ஸ்டெம் செல்ஸ், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் மூலஆதாரம் blueprint போன்று இருப்பதால் இதனை பயன்படுத்தி அனைத்துவகை (pluripotent) செல்களையும் உருவாக்கலாம். இந்த எம்பிரயோனிக் செல் Blastocyst என்ற நிலையிலிருந்து Gastrula என்ற நிலையை அடையும். இது Ectoderm, Mesoderm, Endoderm மற்றும் Germ cell உள்ளடக்கியது. இது மேலும் 220 விதமான செல் தொகுதியாக பிரிந்து இறுதியில் முதிர்ந்த Adult செல்களாக மாறும். இனி இந்த எம்பிரயோ, நஞ்சுக்கொடியுடன் (Placenta) கர்ப்பப்பையில் ஒட்டிக்கொண்டு வளரத்தொடங்கும். இனி இந்த எம்பிரயோ 2 மாதம் வளர்ந்ததின் பிறகு பேடஸ் (Fetus) என்று கூறலாம்.

இந்த Morula/Blastocyst நிலையில் உள்ள எம்பிரயோவில் உள்ள எந்த ஒருசெல்லும் பல்கிப்பெருகி உடலில் உள்ள மற்ற செல் தொகுதியாக மாறக்கூடியது. ஆனால், இந்த எம்பிரயோனிக் ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படும்போது அந்த கரு அழிந்துவிடக்கூடியதாக இருப்பதால் இந்த வகையான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை தடுக்கப்படவேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.

அடல்ட் ஸ்டெம் செல்ஸ் (Adult Stem Cells)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான Multipotent செல்களாக மாறக்கூடியது. இது somatic stem cells என்றும் அழைக்கப்படும். தற்போது மனித தோல் மற்றும் முடியிலிருந்து கூட இந்த வகை ஸ்டெம் செல்லை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வகை ஸ்டெம் செல்லிலிருந்து ஆண், பெண் பாலிணத்திர்குறிய விந்து Sperm மற்றும் கருமுட்டை Ovum செல்களை (Germ cells) உருவாக்க இயலாது. இவ்வகை செல்லை சில மாற்றங்களை ஏற்படுத்தி எம்பிரயோனிக் ஸ்டெம் செல் போன்றதாக Induced Pluripotent Stem Cells (iPSCs) மாற்ற முடியும்.

கார்ட் பிலட் ஸ்டெம் செல்ஸ் (umbilical cord blood stem cells)
Cord blood-derived embryonic-like stem cells (CBEs)
இந்த வகை ஸ்டெம் செல்ஸ், குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்திலிருந்து எடுக்கப்படுகின்ற ஸ்டெம் செல் ஆகும். தொப்புள்கொடி இரத்தத்தில் உள்ள CD34+, CD38- வகை செல்கள் பிரிக்கப்படாத (undifferentiated) செல்களாகும்.

இந்த வகை ஸ்டெம் செல்ஸ் குறிப்பிட்ட வகையான வியாதிகளுக்கு எலும்புமஞ்சை (bone marrow) மாற்று சிகிச்சையை போல பேருதவியாக இருக்கும். தற்போது உலகமெங்கிலும் இவ்வித சிகிச்சைக்கு உதவியாக இருக்க குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் தொப்புள்கொடி இரத்தத்தை எடுத்து அதற்கான தொப்புள்கொடி இரத்த வங்கியில் சேமித்து வைக்கிறார்கள். இது பிற்காலத்தில் அந்த குழந்தைக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏற்படும் வியாதியைக் குணப்படுத்தவும் அல்லது அவர்களின் பழுதுபட்ட உறுப்புகளின் குறைபாட்டை சரிசெய்யவும் பயன்படும்.

இந்த ஸ்டெம் செல் மருத்துவத்தில் Adult Stem cell மற்றும் Cord blood stem cell சிறந்ததாக இருந்தாலும் இவற்றைக்கொண்டு மனித உயிர்செல் Human Cloning உருவாக்கப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டிய வண்செயலாகும்.